சென்னை: போர்ட் கார் நிறுவனம் வெளியேறுவது தொடர்பாக முதல்வர் மு.க.மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் தொழில்துறை அமைச்சர் தங்க தென்னரசு மற்றும் அதிகாரிகளுடன் காலை 11.30 மணிக்கு ஆலோசனை நடைபெறுகிறது. நேற்று மறைமலைநகரில் போர்ட் நிறுவனம் பேச்சு வார்த்தை நடத்திய நிலையில் இன்று முதல்வர் ஆலோசனை நடத்துகிறார்.