×

கடைகளில் கொள்ளை

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர். கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை பஜார் பகுதியில் மளிகை கடை, பேக்கரி, எலக்ட்ரிக்கல், அழகு சாதன பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் உள்ளன.  இந்நிலையில், நேற்று காலை கவரப்பேட்டை சேர்ந்த ஆசாமி பேக்கரி கடைக்கு இனிப்பு வாங்க வந்துள்ளார். அப்போது ஷட்டர் கதவு உடைந்து கிடைந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.  

பின்னர் இதுகுறித்து கவரப்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீசார் அங்கு வந்து ஆய்வு செய்தனர். அதில் பேக்கரி உள்ளிட்ட மூன்று கடைகளின் பூட்டை உடைத்து பணம் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.  இதில் பேக்கரி கடை உரிமையாளர் செல்வம் கடையில் மட்டும் 50 ஆயிரம் கொள்ளைபோனதும், அடுத்தடுத்த கடைகளில் சில்லரை பணம் காணாமல் போனதாகவும் கூறப்படுகிறது. புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடுகின்றனர்.

Tags : Robbery , Robbery
× RELATED சென்னை தாம்பரம் அருகே படப்பை பஜாரில்...