×

குஜராத்தில் கனமழை: ஊருக்குள் வெள்ளம்: காரில் சென்ற 3 பேர் பலி

அகமதாபாத்: குஜராத் மாநிலம், சவுராஷ்டிரா பிராந்தியத்தில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால், ராஜ்கோட், ஜம்னாநகர் மாவட்ட  ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்தது. சாலைகள், வீடுகளில் இடுப்பளவுக்கு வெள்ளம் ஓடியது. இதனால், பீதி அடைந்த மக்கள் வீடுகளின் மீது பாதுகாப்பாக ஏறி நின்றனர். சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களை வெள்ளம் அடித்துச் சென்றது. ஒரு காரில் இருந்த பெண்ணும், 2 ஆண்களும் வெள்ளத்தில் மூழ்கி இறந்தனர்.

மீட்பு பணிகளில் தேசிய, மாநில பேரிடர் மீட்டுக்குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்க, விமானப்படை ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன. இதுவரையில் 1,500க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ராஜ்கோட் மாவட்டத்தில் உள்ள லோதிகா தாலுகாவில் ஒரேநாளில் 435 மிமீ மழை பெய்தது.

Tags : Gujarat , Gujarat, heavy rain
× RELATED ரோட்ஷோவில் கூடிய கூட்டத்தால் நல்ல...