சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் ஜனநாயகத்தின் மீது விழுந்த வடு என தலைமை நீதிபதி அமர்வு கருத்து தெரிவித்துள்ளனர். கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக துப்பாக்கி சூடு நடத்தக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. பலியானவர்களின் குடும்பத்தினருக்கு கூடுதல் இழப்பீடு வழங்குவது குறித்து தமிழ்நாடு அரசு பரிசீலிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.