×

ஆப்கான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட கேரளாவை சேர்ந்த 25 ஐஎஸ் ஆதரவாளர்களால் ஆபத்து : உளவுத்துறை எச்சரிக்கை

புதுடெல்லி:ஆப்கான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த 25 ஐஎஸ் ஆதரவாளர்களால் இந்தியாவுக்கு ஆபத்து இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகின் பல நாடுகளில் இயங்கி வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பால்  ஈர்க்கப்பட்டு, கேரளாவைச் சேர்ந்த 25 பேர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்  ஆப்கான் சென்றனர். கிட்டத்தட்ட மேற்கண்ட அனைவரும் கடந்த 2016 முதல் 2018ம்  ஆண்டுக்கு இடையில் பல்வேறு காலகட்டங்களில் ஆப்கானிஸ்தானுக்கு கள்ளத்தனமாக  தப்பிச் சென்றனர். தற்போது, ஆப்கானிஸ்தான் நாடானது தலிபான் தீவிரவாதிகளின்  கட்டுப்பாட்டுக்குள் வந்ததால், சிறைகளில் அடைக்கப்பட்ட ஐ.எஸ் தீவிரவாதிகள்  அனைவரும் விடுவிக்கப்பட்டனர். அவர்களில், இந்தியாவை சேர்ந்த ஐஎஸ்  ஆதரவாளர்கள் 25 பேரும் அடங்குவர் என்று இந்திய உளவுத்துறை தெரிவித்துள்ளது.  

இதுகுறித்து உளவுத்துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘கடந்த மாதம் ஆப்கானிஸ்தான் சிறைகளில் இருந்து கேரளாவைச் சேர்ந்த 25 ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்கள் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் மீண்டும் இந்தியாவுக்குள் நுழைய வாய்ப்புள்ளது. தேசிய விசாரணைக் குழுவின் (என்.ஐ.ஏ) பட்டியலில் உள்ள இவர்கள், இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எனவே, ஒன்றிய, மாநில அரசுகள் எச்சரிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் விமானங்கள் கண்காணிக்கப்பட்டு வந்தன. தற்போது கடலோர மாவட்டங்கள், சர்வதேச எல்லைகள் உன்னிப்பாக கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


Tags : IS ,Kerala ,Afghan , ப்கான் சிறை
× RELATED மன்னர்களைவிட மோசமான ஆட்சி நடந்து...