கரூர் : கரூர் பேருந்து நிலைய பகுதியில் பேருந்துகள் செல்லும் சாலையில் உள்ள பள்ளத்தை சரி செய்ய வேண்டும் வாகனஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.கரூர் நகரின் மையப்பகுதியில் பேரூந்து நிலையம் செயல்படுகிறது. இந்த பகுதியில் இருந்து வெளியேறும் அனைத்து பேரூந்துகளும் செல்லும் சாலையில் ஆங்காங்கே பள்ளம் உள்ளது.
இந்த பள்ளம் காரணமாக இரண்டு சக்கர வாகனங்களும், பேரூந்துகளும் மிகவும் மெதுவாக சென்று வருகிறது. சில நேரங்களில், பைக்கில் செல்பவர்கள் தவறி விழுந்தும் செல்கின்றனர்.
எனவே, போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள இந்த பள்ளத்தை சரி செய்ய வேண்டும் என அனைத்து வாகன ஓட்டிகளும் எதிர்பார்ப்பில் உள்ளனர். சம்பந்தப்பட்ட துறையினர் இதனை பார்வையிட்டு சீரமைக்க தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.