×

ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவு, மூலப்பொருட்கள் எடுக்க அனுமதி கோரிய வழக்கு ஒத்திவைப்பு

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவு, மூலப்பொருட்கள் எடுக்க அனுமதி கோரிய வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு தரப்பில் பதிலளிக்க அவகாசம் கோரியதை தொடர்ந்து வழக்கு விசாரணையை ஐகோர்ட் மதுரை கிளை ஒத்திவைத்தது. கழிவுகள், மூலப்பொருட்களை எடுக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவன மேலாளர் சுமதி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மக்கள் போராட்டத்தை தொடர்ந்து 2019ல் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு அதன் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.

Tags : Sterlite , Sterlite
× RELATED ஸ்டெர்லைட் ஆலையின் சுற்றுப்புற...