×

விஸ்வரூபம் எடுக்கும் விவகாரம்!: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மேலும் 30 சாட்சிகளை சேர்க்க போலீஸ் திட்டம்..!!

நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில் மேலும் 30 சாட்சிகளை சேர்க்க காவல்துறை திட்டமிட்டுள்ளது. ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் நடத்தப்பட்ட கொலை, கொள்ளையில் பல்வேறு தகவல்கள் மறைக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து நீதிமன்றம் அளித்த அனுமதியின் பேரில் தற்போது கூடுதல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேற்கு மண்டல ஐஜி சுதாகர் மேற்பார்வையில் தனிப்படை போலீசார் விசாரணையை விரைவுபடுத்தியுள்ளனர்.

இந்த வழக்கில் 103 சாட்சிகள் சேர்க்கப்பட்டு 40 பேர் வரை விசாரிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கனகராஜ் மற்றும் சயானின் நண்பர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கூடுதலாக 30 சாட்சிகளை சேர்க்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதனிடையே 4வது குற்றவாளி ஜம்சீர் அலி மற்றும் சிலர் இன்று விசாரணைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2வது குற்றவாளி வாளையார் மனோஜ், ஜாமின் நிபந்தனை தளர்வுகளுடன் தன்னை சிறையில் இருந்து விடுவிக்ககோரிய மனு உதகை நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.


Tags : Viswaroopam ,Kodanadu , Kodanad murder, robbery case, 30 witnesses
× RELATED தேர்தலில் பண வினியோக பிரச்னை; போஸ்டர்...