×

தாம்பரம் மாநகராட்சி அரசாணை வெளியீடு

சென்னை: தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்ட தொடரில் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது, அமைச்சர் கே.என்.நேரு, தாம்பரம் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்றும் அருகில் உள்ள நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகள் தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்கப்படும் என்றும் அறிவித்தார். அதன்படி, தாம்பரம், பல்லாவரம், பம்மல், செம்பாக்கம், அனகாபுத்தூர் ஆகிய 5 நகராட்சிகளையும், சிட்லபாக்கம், மாடம்பாக்கம், பெருங்களத்தூர், பீர்க்கங்கரனை, திருநீர்மலை ஆகிய 5 பேரூராட்சிகளையும் இணைத்து தாம்பரம் மாநகராட்சியாக தமிழக அரசு நேற்று அரசாணை வெளியிட்டுள்ளது.

Tags : Tambaram Corporation , Tambaram Corporation Government Publication
× RELATED பாதாள சாக்கடை பணியின்போது மண் சரிவு:...