நடப்பு சீசன் ஐபிஎல் டி20 தொடரின் எஞ்சிய ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள நிலையில், இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி தனது மனைவி அனுஷ்கா ஷர்மாவுடன் இங்கிலாந்தில் இருந்து நேற்று துபாய் சென்றார். இருவரும் துபாய் ஓட்டலில் உள்ள படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அனுஷ்கா ‘இதோ நாங்கள்... இங்கே’ என்று தகவல் பகிர்ந்துள்ளார். ஆர்சிபி அணிக்காக விளையாட உள்ள வேகப் பந்துவீச்சாளர் முகமது சிராஜும் நேற்று துபாய் சென்று சேர்ந்துள்ளார்.