×

சிறுவாச்சூரில் பேருந்து நிறுத்தத்தை மாற்றி அமைக்க வேண்டும்: வணிகர்கள் வேண்டுகோள்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுவாச்சூரில் பேருந்து நிறுத்தத்தை மாற்றி அமைக்க வேண்டும் என வணிகர்களும், வாகன ஓட்டிகளும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்டும் பணி கடந்த ஓராண்டாக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்த பாலம் கட்டும் பணி மிகவும் மந்தமாக நடைபெற்று வருவதால் அந்த பகுதியில் மிகவும் பெரிய அளவில் வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் நிலையில் சிறுவாச்சூரில் பாலம் கட்டும் இடத்தில் பாலத்தின் இருபுறமும் உள்ள சர்வீஸ் சாலையில் தான் வாகனங்கள் சென்று வருகிறது பாலம் கட்டும் பகுதியில் சர்வீஸ் சாலை குறுகியதாக உள்ளதால் வாகன நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலைமை உள்ளது. இந்நிலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தின் அருகிலேயே இருபுறமும் பேருந்து நிறுத்தம் உள்ளது திருச்சி பெரம்பலூர் செல்லும் வாகனங்கள் நகர பேருந்துகள் ஷேர் ஆட்டோக்கள் என அந்த பாலத்தின் அருகிலுள்ள பகுதியில் நிறுத்தி பயணிகளை இறக்கிவிடும் ஏற்றியும் வரும் நிலையில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் வரிசையாக நின்று விடும் நிலைமை ஏற்படுகிறது.

மேலும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கார் மற்றும் பைக்கில் வந்து செல்லும்போது அந்த பகுதியில் இருந்து திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வரும் போது கூடுதலாக வாகன நெரிசல் ஏற்பட்டு நீண்ட தூரத்திற்கு திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் நின்று ஊர்ந்து சென்று வருகிறது. இதனால் அந்தப் பாலத்தின் அருகிலேயே உள்ள பேருந்து நிறுத்தத்தை சிறிது தூரத்திற்கு அப்பால் பேருந்து மற்றும் ஷேர் ஆட்டோக்கள் நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கும் வகையில் பேருந்து நிறுத்தம் பகுதியை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வணிகர்களும் மற்றும் வாகன ஓட்டிகளும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மாவட்ட நிர்வாகமும் மாவட்ட காவல் துறையும் இணைந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு.

Tags : Siruvachchur , Change the bus stop in Siruvachchur: Traders request
× RELATED ரம்ஜானை முன்னிட்டு சிறுவாச்சூர் ஆட்டுச்சந்தையில் ஆடுகள் விற்பனை மந்தம்