×

துபாயில் சிகிச்சை முடிந்து விஜயகாந்த் சென்னை திரும்பினார்

சென்னை: தேமுதிக தலைவர்விஜயகாந்த், துபாயில் மருத்துவ சிகிச்சை முடிந்து நேற்று அதிகாலை 2.30 மணிக்கு எமரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்னை திரும்பினார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக கடந்த மாதம் 30ம் தேதி துபாய் சென்றார். அவருடன் இளைய மகன் சண்முக பாண்டியன் சென்றார். இதற்கிடையே விஜயகாந்த் மனைவி பிரேமலதா, கடந்த 3ம் தேதி அதிகாலை விமானத்தில் துபாய் சென்றார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, விஜயகாந்த் குணமடைந்து நல்ல நிலையில் மருந்துவமனையில் டிவி பார்த்துக்கொண்டிருப்பது போலவும், அவர் அருகே அவருக்கு சிகிச்சை அளிக்கும் செவிலியர்கள் அமர்ந்திருப்பது போலவும் புகைப்படம் வெளியானது.இந்நிலையில் விஜயகாந்த், மனைவி பிரேமலதாவுடன் நேற்று அதிகாலை 2.30 மணிக்கு துபாயில் இருந்து எமரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்னை வந்தார். பின்னர், காரில் வீட்டிற்கு புறப்பட்டு சென்றார்.

Tags : Vijaykanth ,Chennai ,Dubai , Vijayakant
× RELATED கனமழையால் ஐக்கிய அரபு அமீரகத்தில்...