×

3 டாக்டர்களுக்கு கொரோனா: அவிநாசி அரசு மருத்துவமனை மூடல்

அவிநாசி:  திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் சேவூர் ரோட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் 6 மருத்துவர்கள், 25க்கும் மேற்பட்ட செவிலியர்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு கொரோனா பரிசோதனை மையமும் உள்ளது.  இந்நிலையில் இங்குள்ள டாக்டர்கள் 3 பேர்,  மருத்துவமனை உதவியாளர் என 4 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், அவிநாசி அரசு மருத்துவமனை நேற்று முதல் 3 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது.  அரசு மருத்துவமனையில் பணியாற்றும் 50க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


Tags : Avinashi Government Hospital , Corona, Avinashi Government Hospital, closure
× RELATED 7 ராமேஸ்வரம் மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை