×

மும்பையில் நடந்த மற்றொரு நிர்பயா கொடூரம்: பலாத்காரம் செய்யப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி பரிதாப பலி: மரணத்துடன் 30 மணி நேரம் போராட்டம்

மும்பை: டெல்லியில் நடைபெற்ற நிர்பயா பலாத்கார சம்பவம் போல் மும்பையில் பலாத்காரம் செய்யப்பட்டு, இரும்புக் கம்பியால் பிறப்புறுப்பில் தாக்கப்பட்ட பெண், சிகிச்சை பலனின்றி 30 மணி நேரம் மரணத்துடன் போராட்டம் நடத்தி பரிதாபமாக இறந்தார். மும்பை  புறநகர் பகுதியான சாக்கிநாகாவின் கைரானி சாலையோரத்தில்  நிறுத்தி வைக்கப்பட்டுள்ள டெம்போ வேனில் நேற்று முன்தினம் இரவு 35 வயது பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பிறப்புறுப்பில் கம்பியால் தாக்கப்பட்டு சிதைக்கப்பட்டார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை மீட்ட போலீசார், ராஜவாடி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு  அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு ஓடும் பஸ்சில் இதே பாணியில் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார். மும்பையில் நடந்த சம்பவம், அதை நினைவுப்படுத்துவதாக அமைந்துள்ளது.

இந்த பலாத்காம் தொடர்பாக விசாரித்த மும்பை போலீசார், அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளின் அடிப்படையில்  மோகன் சவுகான் (45) என்ற டிரைவரை கைது  செய்துள்ளனர். இந்நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த பெண்ணின்  உடம்பில் இருந்து அதிகளவில் ரத்தம் வெளியேறி இருந்ததாலும், அவரது பிறப்புறுப்பில் கடுமையான காயம் ஏற்பட்டு இருந்ததாலும், 30 மணி நேர மரண போராட்டத்துக்குப் பிறகு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார். இந்த பலாத்கார சம்பவத்துக்கு மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ்   தாக்கரே கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

உ.பியை சேர்ந்த குற்றவாளி
கைது செய்யப்பட்ட மோகன் சவுகான் உத்தர பிரதேசத்தில் உள்ள ஜான்பூரை சேர்ந்தவன். திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.   மது, போதைக்கு அடிமையானவர் என்பதால் குடும்பத்தினர் வீட்டை விட்டு துரத்தி விட்டனர். சவுகானின் சகோதரர்   மும்பையில் வசிக்கிறார். அவரும் சவுகானின் போதை பழக்கத்தால் வீட்டில் சேர்க்கப்படவில்லை. கடந்த 25 ஆண்டுகளாக சவுகான் மும்பையில் தனியாக வசித்து வருகிறான் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Tags : Mumbai , Mumbai, rape, woman, killed
× RELATED மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 455...