×

ஜீரோ பாயிண்ட் வந்தடைந்தது 4 டிஎம்சி கிருஷ்ணா தண்ணீர்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் வந்துள்ளது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கு-கங்கா நதிநீர் ஒப்பந்தத்தின்படி 15 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும். 3 டிஎம்சி சேதாரம்போக ஜூலை முதல் அக்டோபர் வரை 8  டிஎம்சியும் ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி என மொத்தம் 12 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும்.

இந்த நிலையில், ஆந்திர அரசு கண்டலேறு அணையில் இருந்து கடந்த ஜூன் 14ம் தேதி  தண்ணீர் திறந்துவிட்டது. இந்த தண்ணீர் கடந்த ஜூன் 16ம் தேதி தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட்டுக்கு வந்தது. தற்போது ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டில் 550 கன அடியாக வரும் நிலையில், நேற்று வரை தமிழகத்துக்கு 4 டிஎம்சி தண்ணீர் கிடைத்துள்ளது.

Tags : Zero Point 4 TMC ,Krishna ,Water , Arrived at Zero Point 4 TMC Krishna Water
× RELATED பாலியல் தொல்லை கொடுத்தாக முன்னாள்...