×

மலையாள மாதத்தின் கன்னி மாத பூஜைக்காக செப்டம்பர் 16ல் சபரிமலை கோயில் நடை திறப்பு

பம்பை: மலையாள மாதத்தின் கன்னி மாத பூஜைக்காக செப்டம்பர் 16ல் சபரிமலை கோயில் நடை திறக்கப்படுகிறது. முன்பதிவு செய்த பக்தர்கள் சபரிமலை கோயிலில் செப்டம்பர் 17 முதல் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். இணையதளத்தில் முன்பதிவு செய்த பக்தர்கள் 15,000 பேர் தினமும் சபரிமலை கோயிலில் அனுமதிக்கப்படுவர். செப்டம்பர் 21 வரை பக்தர்கள் தரிசனத்திற்காக சபரிமலை கோயிலில் நடை திறந்திருக்கும் என்று தேவசம் போர்டு அறிவித்துள்ளது. 48 மணி நேரத்திற்கு முன் எடுத்த கொரோனா நெகட்டிவ் சான்று அல்லது 2 டோஸ் தடுப்பூசி சான்று அவசியம்.

Tags : Sabarimaya Temple Walking ,Virgin Month of the Month of Malayalam , Sabarimala
× RELATED விவிபேட் வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு