×

பெண்ணிடம் நகை பறிப்பு

திருவள்ளுர்: சென்னை கொளத்தூரை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி சிவசங்கரி ( 35). நேற்று முன்தினம் மாலை சிவசங்கரி, தனது மொபட்டில் திருவள்ளூர் அடுத்த நரசிங்கபுரம் கிராமத்தில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு புறப்பட்டார். இரவு 9 மணியளவில் நரசிங்கபுரம் அருகே சென்றபோது, பைக்கில் ஹெல்மெட் அணிந்து வேகமாக வந்த 2 பேர், அவரது கழுத்தில் இருந்த 6 சவரன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பினர். புகாரின்படி மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags : Jewelry Flush, Narasingapuram, Complaint
× RELATED இரவில் போன் செய்யும் மாவட்ட தலைவர்...