×

தந்தை பெரியார் விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. ஆண்டு தோறும், சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக “சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” தமிழக அரசால் வழங்கப்படுகிறது. இந்த விருதினை, பெறுவோருக்குரூ.1 லட்சம், ஒரு சவரன் தங்க பதக்கமும், தகுதியுரை ஆகியவை வழங்கப்படும். கடந்த 2020ம் ஆண்டுக்கான தமிழக அரசின் “சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” வழங்குவதற்கு, விருந்தாளர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.

எனவே, சமூக நீதிக்காக பாடுபட்டு, மக்களின் வாழ்க்கை தரம் உயர மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் சாதனைகள் ஆகியவற்றுடன் விண்ணப்பதாரரின் பெயர், சுயவிபரம் மற்றும் முழு முகவரியுடன் வரும் அக்டோபர் 31ம் தேதிக்குள் கலெக்டர் அலுவலத்துக்கு விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

Tags : Father Periyar Award, Application,
× RELATED தமிழ்நாட்டில் 15 இடங்களில் 100 டிகிரி...