விசாகப்பட்டினம்: பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமும் (டிஆர்டிஓ), தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனமும் (என்டிஆர்ஓ) இணைந்து, முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பத்தில் ஐஎன்எஸ் துருவ் போர்க்கப்பல் கட்டப்பட்டுள்ளது. சுமார் 10 ஆயிரம் டன் எடை கொண்ட இந்த கப்பல், இந்திய கடற்படையில் நேற்று இணைக்கப்பட்டது. ஐஎன்எஸ் துருவ் இந்தியாவில் கட்டப்பட்ட முதல் செயற்கைக்கோள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை கண்காணிப்பு கப்பலாகும். இந்தியாவை உளவு பார்க்கும் செயற்கைக்கோள்களை கண்டறிந்து எச்சரிக்கை செய்யும் நவீன தொழில்நுட்பத்தை இக்கப்பல் கொண்டுள்ளது.
Tags : Indian Navy ,Indian Ocean , Nuclear missile attack, INS polar warship,
Indian Navy