×

கோவையில் ஓடும் காரில் பெண் சடலம் வீசப்பட்டது குறித்து விசாரிக்க உத்தரவு

புதுடெல்லி: கோவை அவிநாசி சாலை சின்னியம்பாளையம் பகுதியில் இரு தினங்களுக்கு முன், காரில் இருந்து ஒரு பெண்ணின் சடலம் சாலையில் வீசப்பட்டது. இது தொடர்பான வீடியோ காட்சி வைரலானது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அந்தப் பெண்ணுக்கு 45-50 வயது இருக்கும். அவருடைய சடலத்தை வீசி விட்டு சென்ற வாகனத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக தானாவே வழக்கு பதிவு செய்துள்ள தேசிய பெண்கள் நல ஆணையம், பெண்ணின் சடலத்தை வீசி விட்டு சென்ற குற்றவாளிகள் யார் என்பதை உடனடியாக கண்டறிந்து, நடவடிக்கை எடுக்கும்படி தமிழக காவல்துறைக்கு நேற்று உத்தரவிட்டது.

Tags : Coimbatore , Coimbatore, female corpse, trial, order
× RELATED கோவை மாநகராட்சி நீச்சல் குளத்தில் குவியும் சிறுவர்கள்