×

தமிழகம் முழுவதும் 9 டிஎஸ்பிக்கள் பணியிடமாற்றம்: டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

சென்னை: டிஜிபி சைலேந்திரபாபு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: விருத்தாசலம் டிஎஸ்பியாக இருந்த மோகன் சென்னை சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவுக்கும், திருவள்ளூர் மாவட்டம் குற்றப்பிரிவில் இருந்த அசோகன் சென்னை சிபிசிஐடி தலைமையிட டிஎஸ்பியாகவும், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் டிஎஸ்பியாக இருந்த கணேசன் காஞ்சிபுரம் பொருளாதார குற்றப்பிரிவுக்கும், செங்கல்பட்டு மாவட்டம் பொருளாதார குற்றப்பிரிவில் இருந்த சங்கர சுப்பிரமணியன் சென்னை மாநில சைபர் குற்றப்பிரிவு டிஎஸ்பியாகவும், செங்கல்பட்டு மாவட்டம் குற்றப்பிரிவில் இருந்த கல்பனா தத் திருவள்ளூர் மாவட்டம் குற்றப்பிரிவு டிஎஸ்பியாகவும்,

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி டிஎஸ்பியாக இருந்த பழனிசெல்வம் சென்னை கடலோர பாதுகாப்பு குழுமத்திற்கும், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி டிஎஸ்பியாக இருந்த ரவிச்சந்திரன் செங்கல்பட்டு மாவட்டம் குற்றப்பிரிவுக்கும், திருவண்ணாமலை மாவட்டம் செய்முறை பயிற்சி பிரிவில் இருந்த சுரேஷ் பாண்டின் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி டிஎஸ்பியாகவும், வேலூர் மாவட்டம் செய்முறை பயிற்சி பிரிவில் இருந்த பூரணி தஞ்சை புறநகர் டிஎஸ்பியாகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Tags : Tamil Nadu ,DGP , Tamil Nadu, DSP, Transfer, DGP Silenthrababu
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...