சென்னை: நடிகர் விவேக் உயிரிழப்பு குறித்து 8வாரத்தில் உரிய விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஒன்றிய சுகாதாரத்துறை செயலாளருக்கு தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் விவேக் இறப்பில் சந்தேகம் உள்ளதாக விழுப்புரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன் என்பவர் புகார் அளித்திருந்தார். கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 2 தினங்களுக்கு பின்பே நடிகர் விவேக் உயிரிழந்தாக சரவணன் புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.