நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 9வது நபரான மனோஜ்சாமி விசாரணைக்கு ஆஜராக தனிப்படை அழைப்பு விடுத்துள்ளது. திருச்சூர் கோடக்கரா பகுதியில் கொரோனா கட்டுப்பாடு இருப்பதால் ஆஜராக இயலாது என மனோஜ் சாமி தரப்பு தெரிவித்திருக்கிறது. வழக்கில் முதல் நபராக சேர்க்கப்பட்டுள்ள சயானிடம் விசாரித்த நிலையில் மனோஜ் சாமியிடம் விசாரிக்க திட்டமிடப்பட்டிருந்தது.