கோவை: கோவையில் காரில் இருந்து சாலையில் வீசப்பட்ட பெண் சடலம் பற்றி தேசிய மகளிர் நல ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. குற்றவாளிகளை உடனே கண்டறிந்து வழக்குப்பதிவு செய்ய தமிழக டி.ஜி.பி.க்கு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. கோவை சின்னியம்பாளையம் சோதனைச் சாவடி அருகே சாலை விபத்தில் இறந்த ஒரு பெண்ணின் சடலத்தை போலீஸார் மீட்டனர். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.