×

'தவறான செயலை மோடி எந்த துணிச்சலில் செய்கிறார்?' - காரைக்குடியில் ப.சிதம்பரம் பேட்டி

காரைக்குடி: தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது; உள்ளாட்சி தேர்தலில் இது எதிரொலிக்கும் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம்; இந்தியா சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளில் காங்கிரஸ் அரசு செய்த திட்டங்களை மோடியே பட்டியலிட்டுள்ளார். பிரதமர் மோடி பட்டியலிட்டு கூறியதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா 70 ஆண்டுகளாக சேர்த்த சொத்துகளை பிரதமர் மோடி விற்பனை வேதனை அளிக்கிறது.

பொதுத்துறைக்கு மோடி அரசு மூடுவிழா நடத்துகிறது. விமான நிலையங்கள், துறைமுகங்கள் உள்ளிட்ட எல்லாவற்றையும் தனியார் மயமாக்குகின்றனர். தனியார்மயமாக்கும் பாஜக அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது. பொதுச்சொத்துக்களை குத்தகைக்கு விடுவது குறித்து யாருடனும் மோடி அரசு கலந்து ஆலோசிக்கவில்லை. தவறான செயலை பிரதமர் மோடி எந்த துணிச்சலில் செய்கிறார்? என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர்; முந்தைய அரசு எண்ணெய் பாத்திரங்களை வெளியிட்டதால் அரசு பெட்ரோல் விலையை குறைக்க முடியவில்லை என்பது ஆபத்தானது.

இலங்கையில் இருந்து தமிழர்கள் அகதிகளாக வந்தால் குடியுரிமை தர சட்டத்தில் இடமில்லை. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியதற்கு வரவேற்பு. கொரோனா உச்சக்கட்டத்தில் இருந்த போது ஆக்சிஜன் பற்றாக்குறையே இல்லை என்று மோடி அரசு கூறியது உண்மையில்லை. ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு ஏற்படவில்லை என்று மோடி அரசு தவறான தகவல் கூறியுள்ளது. தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது; உள்ளாட்சி தேர்தலில் இது எதிரொலிக்கும் எனவும் கூறினார்.

Tags : Modi ,Karakatta ,Clitter , 'How dare Modi do the wrong thing?' - Interview with P. Chidambaram in Karaikudi
× RELATED ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம்;...