×

வீட்டுமனைகளுக்கு கிரய தொகையை செலுத்த தவறியவர்களுக்கு சலுகை: ஆர்.கே.நகர் எம்எல்ஏவுக்கு அமைச்சர் பதில்

சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி திமுக எம்எல்ஏ ஜே.ஜே.எபினேசர் பேசுகையில், ”ஆர்.கே.நகர் பாரதிநகர் பகுதியில் வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு வீட்டுமனைகள் ஒதுக்கப்பட்டது. இதில் 65 உரிமையாளர்கள் கிரய தொகையை முழுமையாக செலுத்தி கிரய பத்திரத்தை பெற்றுள்ளார்கள். மீதமுள்ளவர்களால், கிரய தொகை காக செலுத்த முடியவில்லை. கிரய தொகையை கட்டியவர்களுக்கு பட்டா வழங்க தடையில்லா சான்று வழங்க வேண்டும். கிரய தொகையை செலுத்த தவறியவர்களுக்கு, சலுகை வழங்கி அவர்களுக்கு கிரய பத்திரம் வழங்க வேண்டும்’’ என்றார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசுகையில்,‘‘இந்த திட்டப்பகுதிக்கான நிலம் மாற்றம் செய்யப்பட்டு விற்பனை பத்திரம் 217 மனைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 221 மனைகளில் உள்ள பயனாளிகள் உரிய ஆணவங்கள், முழு கிரய தொகை செலுத்தாத நிலையில் உள்ளனர். சிறப்பு முகாம் அமைத்து மனைக்கான தொகையை பெற்று கிரய பத்திரம் நிச்சயமாக வழங்குப்படும் என்றார்.

Tags : RK ,Nagar , Concession for those who fail to pay the purchase price for houses: Minister's reply to RK Nagar MLA
× RELATED ஆர்.கே.நகர் தொகுதியில் ஒரு சில...