சென்னை: தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம் உத்தரவு: தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் சிலருக்கு அதற்கான சான்றிதழ்கள் கிடைக்கப் பெறவில்லை. இதையடுத்து பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம் வெளியிட்டுள்ள உத்தரவு: மாவட்ட அளவிலான அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் அவர்களது தொலைபேசி எண்களையும் வெளியிட்டுள்ளார். கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் ஏற்படும் பிரச்னைகளுக்கு கோவின் செயலியில் சென்று ரைஸ் யேன் இஷ்யூ என்ற தெரிவை தேர்வு செய்து தங்களது பிரச்னைகளுக்குத் தீர்வு காணலாம். அதில் தீர்வு கிடைக்காவிடில் 104 எண்ணில், சம்பந்தப்பட்ட உதவி மைய அதிகாரிகளின் எண்ணைப் பெற்று தீர்வு காணலாம்.