×

மாற்றுத் திறனாளிகளுக்கு ஸ்மார்ட் அட்டை

திருப்போரூர்: திருப்போரூரில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டத்தில் அடங்கிய கிராமங்களில் வசிக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழக அரசின் ஸ்மார்ட் கார்டு வழங்கும் நிகழ்ச்சி திருப்போரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. திருப்போரூர் வட்டாட்சியர் ராஜன் தலைமை தாங்கினார். வருவாய் ஆய்வாளர் புஷ்பராணி வரவேற்றார். செங்கல்பட்டு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செந்தில்குமாரி, திருப்போரூர் வட்டத்தை சேர்ந்த 60 மாற்றுத் திறனாளிகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கினார். இந்நிகழ்ச்சியில், தனி வட்டாட்சியர் சுமதி உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Smart card for the alternatively abled
× RELATED ஈரோடு பவானி சட்டமன்ற தொகுதியில் தடுப்பூசி போட்டால் தங்க காசு