மாஸ்கோ: பயங்கரவாதம் மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்கு ஆதாரமாக ஆப்கானிஸ்தான் உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற பிரிக்ஸ் மாநாட்டில் ரஷ்ய அதிபர் புடின் பேசியுள்ளார். ஆப்கானிஸ்தான் தனது அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தலாக மாறிவிடக் கூடாது. அடுத்த 15 ஆண்டுகளில் பிரிக்ஸ் கூட்டமைப்பு அதிக உற்பத்தித் திறன் கொண்டதாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.