×

திருப்பரங்குன்றம் அருகே 16ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு

திருப்பரங்குன்றம்: மதுரை மாவட்டம்  திருப்பரங்குன்றம் அருகில் கருவேலம்பட்டி உள்ளது. இந்த கிராமத்தில் இருந்து மொச்சிகுளம் செல்லும் பாதையில் விவசாய நிலத்தின் அருகில் உள்ள பாறையில் ஆண், பெண் உருவமுடைய புடைப்பு சிறப்பமும், அதன் அருகே நான்கு எழுத்துக்களும் இருந்துள்ளது. இதுகுறித்து இப்பகுதியை சேர்ந்த சூரியபிரகாஷ் கொடுத்த தகவலின் பேரில், பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் ஆய்வாளர் முனீஸ்வரன், வரலாற்று பேராசிரியர்கள் லெட்சுமணமூர்த்தி,  அஸ்வத்தாமன்,  சுப்பிரமணியன்,  ராமகிருஷ்ணன் மற்றும் மூத்த தொல்லியல் ஆய்வாளர் சாந்தலிங்கம் ஆகியோர் அடங்கிய குழு ஆய்வு செய்துள்ளது. இதில் இந்த பாறையில் உள்ளது கிரந்த எழுத்துக்கள் எனவும், இவை சுமார் 16ம் நூற்றாண்டை சேர்ந்தவை எனவும் இந்த எழுத்து  2 அடி அகலம்,  4 அடி நீளமும் கொண்ட 4 வரிகளில் கிரந்த எழுத்துகளுடன் காணப்பட்டுள்ளது. இதன் அருகில் 2 அகலம் 3 அடி உயரம் கொண்ட புடைப்பு சிற்பமும் காணப்பட்டுள்ளது.

மேலும் இதில் கோபாலகிருஷ்ணன் மகன் என்ற வரியில் தொடங்கி நான்காவது வரியில் தம்மம் என்ற சொல்லில் முடிவு பெறுகிறது. இடையில் உள்ள எழுத்து காலப்போக்கில் மழை, வெயில் போன்றவற்றால் சிதைந்து விட்டதால் தொடச்சியான பொருளை அறிய முடியவில்லை. தம்மம் என்ற சொல் தானத்தை குறிக்க பயன்பட்டுள்ளது.இச்சிற்பம் நீண்ட காதுகளுடன்,  கழுத்தில் அணிகலன் அணிந்து கொண்டு ஆணின் சிற்பமும், சரிந்த கொண்டையுடன், நீண்ட காதும் கையில் வளையல் அணிந்து கொண்டு சற்று சாய்ந்த நிலையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இச்சிற்பம் அப்பகுதியில் வாழ்ந்த தலைவன் தலைவிக்காக உருவாக்கப்பட்டு இருக்கலாம் எனவும் இந்த சிற்பத்தை இப்பகுதியில் உள்ள மக்கள் நீலன்,  நீலி என்று பெயரில் தெய்வமாக வழிப்பட்டு வருகின்றனர்.


Tags : Thiruparankundram , 16th century near Thiruparankundram Inscription Discovery
× RELATED 6 மாதத்திற்கு பின் திருப்பரங்குன்றம்...