காபூல்: ஆப்கானிஸ்தானில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடக்கூடாது என்று தலிபான்கள் அறிவித்துள்ளனர். எழுப்பப்படும் முழக்கங்கள், ஏந்திச்செல்லும் பதாகைகளுக்கும் முன் அனுமதி பெற வேண்டும் என தலிபான்கள் அரசு அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் மகளிருக்கு உரிமை கோரி தினமும் பெண்கள் நடத்திவரும் போராட்டங்களை ஒடுக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.