×

அம்பத்தூர் பகுதிக்கு மெட்ரோ ரயிலை விரிவுபடுத்த வேண்டும்: ஜோசப் சாமுவேல் எம்எல்ஏ வலியுறுத்தல்

சென்னை:   தமிழக சட்டப்பேரவையில் நேற்று ஆதிதிராவிடர், சிறுபான்மையினர் நலன் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆகிய மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு அம்பத்தூர் தொகுதி உறுப்பினர் ஜோசப் சாமுவேல்(திமுக) பேசியதாவது:  கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் அம்பத்தூர் தொகுதி பாழ்பட்டு கிடக்கிறது. அதை சிறப்பான தொகுதியாக மாற்றித் தர கேட்டுக் கொள்கிறேன். சென்னை - திருத்தணி - ரேணிகுண்டா நெடுஞ்சாலைக்கு கலைஞர் கருணாநிதி பெயரை சூட்ட கேட்டுக் கொள்கிறேன். அம்பத்தூர் தொகுதியில் கலைஞர் ஆட்சியில் தொடங்கப்பட்ட உழவர் சந்தை சிதிலமடைந்துள்ளது.

அதை நவீன சந்தையாக மாற்றித் தர வேண்டும். மெட்ரோ ரயில் போக்குவரத்தை சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அம்பத்தூர் பகுதிக்கு விரிவுபடுத்தி தர வேண்டும். அம்பத்தூர் சிட்கோ தொழிற்பேட்டைக்கு அன்றாடம் ஒரு லட்சம் பேருக்கு மேல் வந்து செல்கின்றனர். அங்கு அனைத்து வசதிகளுடன் கூடிய உட்கட்டமைப்புகளை ஏற்படுத்தி தர கேட்டுக் கொள்கிறேன். அம்பத்தூர் மற்றும் கொரட்டூர் ஏரிகளை சீரமைத்து படகு சவாரி வசதி ஏற்படுத்தி தர வேண்டும். அம்பத்தூர் பகுதி சென்னை மாநாகராட்சியோடு இணைக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாகிறது. என்றார்.

Tags : Rail ,Ambattur ,Joseph Samuel ,MLA , Ambattur, Metro Rail, Joseph Samuel MLA
× RELATED சென்னையில் இருந்து விமான நிலையம் வந்த...