×

திண்டுக்கல்லில் தள்ளுவண்டி கடைக்காரருக்கு கத்திக்குத்து-போதை வாலிபர் உள்பட 2 பேர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் தள்ளுவண்டி கடைக்காரரை கத்தியால் குத்தி விட்டு தப்பியோடிய போதை வாலிபர் உள்ளிட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.திண்டுக்கல்லில்  பழநி சாலையில் காளிமுத்து பிள்ளை சந்து அருகே வீட்டு உபயோக பொருட்கள்  விற்பனை செய்யும் கடை உள்ளது. நேற்று முன்தினம் இரவு இந்த கடைக்குள்  மதுபோதையில் பட்டாக்கத்தியுடன் புகுந்த வாலிபர் ஒருவர், அங்கிருந்த  ஊழியர்களிடம் பணம் தரும்படி மிரட்டினார். ஆனால் தர மறுத்த ஊழியர்கள், போதை  வாலிபரிடம் இருந்த கத்தியை பறித்து அவரை பிடிக்க முயன்றனர்.

இதனையடுத்து  கடையிலிருந்து வெளியேறிய வாலிபர், அப்பகுதியில் தள்ளுவண்டி கடை நடத்தி  வரும் ரத்தினகுமார் (52) என்பவரை கத்தியால் குத்தினார். இதனை பார்த்த  பொதுமக்கள் அங்கிருந்து அலறியடித்து ஓடினர். பின்னர் போதை வாலிபர், அங்கு  டூவீலரில் வந்த தனது நண்பருடன் தப்பியோடினார். இதனால் அப்பகுதியில் பதற்றம்  நிலவியது.

தகவலறிந்து வந்த திண்டுக்கல் மாவட்ட எஸ்பி சீனிவாசன்,  மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில்  விசாரணை நடத்தினர். பின்னர் காயமடைந்த ரத்தினகுமாரை மீட்டு, திண்டுக்கல்  அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து  போலீசார் வழக்குப்பதிந்து போதை வாலிபர், அவரது நண்பர் ஆகியோரை கைது  செய்தனர். விசாரணையில் அவர்கள் திண்டுக்கல் அசோக்நகரை சேர்ந்த கோகுல் (24),  குட்டி (எ) பிரபு (33) என்பது தெரிந்தது. மேலும் போதை வாலிபர் கடைக்குள்  புகுந்து கத்தியை காட்டி ஊழியர்களுடன் பணம் கேட்டும் சிசிடிவி கேமரா  காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி திண்டுக்கல்லில் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.


Tags : Dindigul , Dindigul: Police arrested two persons, including a drug addict, for stabbing a trolley shopkeeper in Dindigul and fleeing.
× RELATED திண்டுக்கல்லில் ரூ.4.5 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல்