×

காலமுறை ஊதியம் வழங்க கோரிக்கை வேதாரண்யம், தலைஞாயிறில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

வேதாரண்யம் : வேதாரண்யம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பாக கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் துர்காம்பிகா முன்னிலை வகித்தார். ஓய்வுபெறும் சத்துணவு ஊழியர்களுக்கு குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வு ஊதியம் ரூபாய் 9 ஆயிரம் வழங்க வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் .ஓய்வுபெறும் சத்துணவு ஊழியர்களுக்கு வழங்கும் பணிக்கொடை தொகை 5 லட்சமும் சமையலர், உதவியாளருக்கு 3 லட்சமும் வழங்க வேண்டும்.

காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். சத்துணவு அமைப்பாளர்களுக்கு ஓய்வு பெறும் வயதை 62 ஆக உயர்த்த வேண்டும் .சத்துணவு சமையலர், உதவியாளர்களுக்கு ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்த வேண்டும் என கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

தலைஞாயிறு: வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பாக கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தலைஞாயிறு ஒன்றிய தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ரம்யா, ஒன்றிய பொருளாளர் பரமேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை தலைவர் எழிலரசி நன்றி கூறினார்.

Tags : Vedaranyam: Requests on behalf of the Nutrition Employees Union in front of the Vedaranyam Revenue Commissioner's Office
× RELATED போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக...