சென்னை: ஐஏஎஸ் அதிகாரிகள் கூடுதலாக பயின்ற உயர் கல்விக்கு ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு மத்திய அரசின் நடைமுறையைப் பின்பற்றி ஊக்கத்தொகை வழங்கப்படவுள்ளது. பி.எச்டி அல்லது அதற்கு நிகரான படிப்பு முடித்திருந்தாள் ரூ.30,000 ஊக்கத்தொகை வழங்கப்படும்.