×

பெண்ணுக்கு கருக்கலைப்பு கணவர், மாமியார் மீது புகார்

பொன்னேரி: சோழவரம் அடுத்த செங்குன்றம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் முகமது முஸ்தபா. இவருக்கும் முபினா என்பவருக்கும் கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த நாளில் இருந்து 30 சவரன் நகை, ரூ.5 லட்சம் கேட்டு தினமும் அடித்து உதைத்து கொடுமைப்படுத்தினார். மேலும், முகமது முஸ்தபா மனைவிக்கு கருக்கலைப்பு மாத்திரை கொடுத்து கருவை கலைத்து வீட்டை விட்டு துரத்தினார். அவருக்கு ஆதரவாக மாமியார் ஷாஜகான் மற்றும் கணவரின் தங்கை நைமுனிசா ஆகியோர் சேர்ந்து கொடுமைபடுத்தியுள்ளனர். இதனால் மனமுடைந்த முபினா அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொன்னேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மகிதா அன்னா கிறிஸ்டி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Tags : Woman complains about abortion husband, mother-in-law
× RELATED இன்று மகரஜோதி தரிசனம்: சபரிமலையில் 1 லட்சம் பக்தர்கள்