×

சட்டீஸ்கர் முதல்வரின் தந்தை அதிரடி கைது

ராய்பூர்: ‘பிராமணர்களை வெளிநாட்டினர் என்று கூறி புறக்கணித்து, அவர்களை கிராமங்களுக்குள் நுழைய விடாதீர்கள்’ என்று மக்களிடம் சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகலின் தந்தை நந்த் குமார் பாகல் வேண்டுகோள் விடுத்தார். புகாரின் பேரில், முதல்வரின் தந்தை நந்தகுமார் பாகல் (86) மீது 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், டெல்லியில் இருந்த முதல்வரிம் தந்தை நந்தகுமார் பாகலை ராய்பூர் போலீசார் கைது செய்து, ராய்பூர் அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். இம்மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.


Tags : Chhattisgarh ,Chief Minister , Chhattisgarh Chief Minister's father arrested
× RELATED சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் 6 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!!