×

தமிழக காவல்துறையில் முதல் நபர் ஆணழகன் போட்டியில் பங்கேற்பவருக்கு ரூ.1 லட்சம்: நேரில் அழைத்து டிஜிபி சைலேந்திரபாபு வாழ்த்து

சென்னை: சென்னை மாநகர காவல் துறையில் அடையாறு போக்குவரத்து காவல் நிலையத்தில் தலைமை காவலராக புருஷோத்தமன் பணியாற்றி வருகிறார். தலைமை காவலர் புருஷோத்தமன், கடந்த மாதம் சண்டிகரில் நடந்த உலக ஆணழகன் போட்டியின் தகுதி தேர்வில் கலந்து கொண்டு தேர்வாகியுள்ளார். உஸ்பெஸ்கிஸ்தான் நாட்டில் நடைபெறும் உலக ஆணழகன் போட்டியில் கலந்து கொள்கிறார். உலக ஆணழகன் போட்டியில் கலந்து கொள்ளும் தமிழக காவல் துறையின் முதல் தலைமை காவலர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இவருக்கு அனைத்து பேட்ச் காவலர்கள் வாட்ஸ் அப் குழுவினர் ரூ.1 லட்சம் தந்து உதவி செய்துள்ளனர். இதற்கிடையே தமிழக காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபு உஸ்பெகிஸ்தான் நாட்டில் உள்ள தாஷ்கண்ட்டில் நடைபெறும் உலக ஆணழகன் போட்டியில் கலந்து கொள்ளும் அடையாறு போக்குவரத்து தலைமை காவலர் புருஷோத்தமனை நேற்று நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார். மேலும், அவருக்கு ரூ.1 லட்சம் நிதியை ஊக்கத் தொகையாக வழங்கினார்.



Tags : Tamil Police Competition ,Djibi Silendrababu , Rs 1 lakh for first person male contestant in Tamil Nadu Police: DGP Silenthrababu congratulates
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...