×

மாணவர்கள், ஆசிரியர்களுக்கு சுழற்சி முறையில் கொரோனா பரிசோதனை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: சென்னை சைதாப்பேட்டை ரெட்டிக்குப்பம் சாலை அரங்கநாதன் சுரங்கப்பாதை அருகில் ரூ.13 லட்சம் மதிப்பில் சாலையோர பூங்கா அமைக்கும் பணியினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் வருகிற 12ம் தேதி ஒரே நாளில் 10 ஆயிரம் முகாம்களில் 20 லட்சம் தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கிக்கப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சுழற்சி முறையில் தொடர்ந்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார்.

Tags : Minister ,Ma Subramaniam , Corona testing for students and teachers in rotation: Minister Ma Subramaniam Information
× RELATED அமைதிப்பூங்காவான தமிழகம் என மீண்டும்...