சென்னை: டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.500 ஊதிய உயர்வு வழங்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி விறபனையாளர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் மதுபானம் விற்பனை செய்யும் எண்ணம் அரசிடம் இல்லை என அவர் கூறியுள்ளார்.