×

ஆப்கன் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு நடுவே திரை அமைத்து வகுப்புகள்... தாலிபானின் தற்போதைய ஆட்சியின் நிலை

காபூல் : ஆப்கானிஸ்தானில் இன்று கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் செயல்பட தொடங்கியுள்ள நிலையில், வகுப்புகளை திரைச்சேலை மூலம் பிரித்து ஒருவரை ஒருவர் பார்க்க முடியாத படி மாணவ, மாணவியர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகிறது. ஆப்கனில் தாலிபான்கள் ஆட்சியை பிடித்து 3 வாரங்கள் கடந்துள்ள நிலையில், காபூல், கந்தகார் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பல்கலைக்கழகங்கள் இன்று முதல் செயல்பட தொடங்கியுள்ளன. மாணவ, மாணவிகளுக்கு கல்லூரிகளில் தனித்தனியே வகுப்புகள் நடைபெறும் என்று ஏற்கனவே தாலிபான்கள் அறிவித்து இருந்தனர்.

அதன்படி பல்கலைக்கழகங்களில் வகுப்புகள் அனைத்தும் திரைச் சேலை மூலம் சரி பாதியாக பிரிக்கப்பட்டு இருக்கின்றன.திரைக்கு ஒரு புறம் மாணவர்களும் மறுபக்கம் மாணவிகளும் ஒருவரை ஒருவர் பார்க்க முடியாதபடி அமரவைக்கப்பட்டு பாடம் நடத்தப்பட்டு வருகிறது.காபூல் அவிசன பல்கலைகழக வகுப்பறைகளில் எடுக்கப்பட்ட படங்கள் இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. ஆப்கானை கைப்பற்றியுள்ள பழமைவாத இயக்கமான தாலிபான்கள், பெண்களுக்கு என்ன உரிமைகள் வழங்க போகிறது என்று உலக நாடுகள் எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கும் நிலையில், கல்விக்கூட வகுப்பறையில் இருந்து பாலின பாகுபாட்டை தொடங்கி இருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Taliban , ஆப்கன், கல்லூரி,திரைச்சேலை
× RELATED ஆப்கானிஸ்தானில் 13 வயதிற்கு மேல் பெண்கள் பள்ளிகளுக்கு செல்ல தடை