×

கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள மாணவர்களின் பள்ளிகளுக்கு சீல் வைக்கப்படும்: அமைச்சர் மா சுப்பிரமணியன் பேட்டி

சென்னை : திட்டமிட்டபடி ஞாயிற்றுக்கிழமை 10,000 முகாம்கள் நடத்தி 20 லட்சம் தடுப்பூசி போடப்படும் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன்  தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டை அரங்கநாதன் மேம்பாலத்திற்கு அருகே சாலையோர பூங்கா அமைப்பதற்காக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அடிக்கல் நாட்டினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கேரள எல்லையை ஒட்டியுள்ள 9 மாவட்டங்களில் தடுப்பூசி போட முன்னுரிமை அளிக்கப்படும். 9 மாவட்டங்களிலும் குறைந்தபட்சம் ஒவ்வொரு மாவட்டத்திலும் 1000 முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அனைத்து பள்ளிகளிலும் ரேண்டம் அடிப்படையில் கொரோனா பரிசோதனை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள பள்ளிகளுக்கு சீல் வைக்கப்படும். தமிழகத்தில் பள்ளிகளில் பாதிப்பு ஏற்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் குறிப்பிட்ட அந்த பள்ளிகளை மூடுவதற்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தமாக  3,59,31,677 தடுப்பூசி போடப்பட்டுள்ளது. முதல் தவணை தடுப்பூசி 44 சதவீதமும், 15 சதவீதம் பேருக்கு இரண்டம் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் 22,16,160 தடுப்பூசி வந்ததில் தமிழக  அளித்த அழுத்தம் காரணமாக இதுவரை தனியார் மருத்துவமனைகள் மூலம் பெறப்பட்ட அனைத்து தடுப்பூசிகளும் போடப்பட்டுள்ளது. கூடுதல் கொரோனா தடுப்பூசிகள் கேட்டு ஒன்றிய சுகாதார அமைச்சருக்கு ஒன்று கடிதம் எழுத உள்ளேன்.வருகிற 12ம் தேதி 20 லட்சம் கொரோனா தடுப்பூசி போட இலக்கு நிர்ணயித்துள்ளோம். அதன்படி, திட்டமிட்டபடி ஞாயிற்றுக்கிழமை 10,000 முகாம்கள் நடத்தி 20 லட்சம் தடுப்பூசி போடப்படும்,என்றார்.


Tags : Minister ,Ma Subramaniam , அமைச்சர் மா. சுப்பிரமணியன்
× RELATED மோடியை திட்டி பேசினால் வீடு திரும்ப...