×

ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலை தகர்ப்போம்: இமெயிலில் மிரட்டல்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சியில் இந்திய அரசுக்கு சொந்தமான கப்பல் கட்டும் தொழிற்சாலை உள்ளது. தற்போது இந்திய கடற்படைக்காக ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி போர்க்கப்பல் கட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று கப்பல் கட்டும் தொழிற்சாலைக்கு இ-மெயில் மூலம் ஒரு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. அதில், ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பல், கப்பல் தொழிற்சாலையை குண்டு வைத்து தகர்ப்போம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக அதிகாரிகள் எர்ணாகுளம் தெற்கு போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.

இது தவிர ஒன்றிய உளவு துறையினரும் விசாரணையை தொடங்கி உள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன் கொச்சி கப்பல் கட்டும் தொழிற்சாலையில் பணிபுரிந்த ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஒருவர் பிடிபட்டார். அவரிடம் போலீசார் விசாரித்த போது மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் நடித்தார். எந்த விவரங்களையும் தெரிவிக்க வில்லை. ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர் இங்கு எப்படி வேலைக்கு சேர்ந்தார் என்பது உள்பட எந்த விவரத்தை வெளியிட அதிகாரிகள் மறுத்து விட்டனர். இவருக்கும் மிரட்டல் சம்பவத்திற்கும் தொடர்பு உண்டா? என்பது விசாரணைக்கு பிறகே தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

Tags : INS , Let's destroy the INS Vikrant ship: Threat in email
× RELATED கடற்கொள்ளை தடுப்பு ஐஎன்எஸ் சாரதா கப்பலுக்கு விருது