×

திருவெறும்பூரில் குட்கா வழக்கில் கைதான பாமக நிர்வாகிக்கு நூதன தண்டனை: திருச்சி கோர்ட் உத்தரவு

திருவெறும்பூர்: திருச்சி திருவெறும்பூரில் உள்ள கடைகளில் போலீசார் நேற்றுமுன்தினம் சோதனை நடத்தினர். அப்போது திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய பாமக செயலாளரான சுருளி கோவில் தெருவை சேர்ந்த ரவிக்குமார்(42) என்பவரின் கடையில் குட்கா விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல் திருவெறும்பூர் அருகே காட்டூர் பகுதியில் குட்கா விற்ற காளியம்மாள்(60) என்பவரும்  கைது செய்யப்பட்டார். இருவரிடம் இருந்து ரூ.40ஆயிரம் மதிப்பிலான குட்காவை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் கைதான இருவரும் திருச்சி ஜெஎம் 6 நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கில் 2 பேரையும் ஜாமீனில் விடுதலை செய்த நீதிபதி (பொ) குமார், பாமக நிர்வாகி ரவிக்குமார், காளியம்மாள் ஆகியோர் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் 20 நாட்கள் தொடர்ந்து கையெழுத்திட வேண்டும். காவல் நிலையத்தை 20 நாட்களுக்கு தினம்தோறும் தூய்மைப்படுத்த வேண்டும். காவல் நிலைய வளாகத்தில் உள்ள பறவைகளுக்கு உணவு வைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

Tags : Trichy ,Pamaka ,Gutka ,Thiruverumbur , Trichy court orders fresh sentence for Pamaka administrator arrested in Gutka case in Thiruverumbur
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...