×

கடைகள் மற்றும் நிறுவனங்களில் வேலையாட்கள் அமர இருக்கை கட்டாயம் : சட்டப்பேரவையில் சட்ட முன்வடிவு தாக்கல்

சென்னை:கடைகள் மற்றும் நிறுவனங்களில் வேலையாட்களுக்கு இருக்கை வழங்க சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டு சட்ட முன்வடிவு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.தமிழக சட்டப்பேரவையில் இன்று 1947ம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றம் நிறுவனங்கள் சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கான ஒரு சட்ட முன்வடிவை தொழிலாளர் நலன்-திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:

மாநிலத்தில் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் நபர்கள் அவர்களது வேலை நேரம் முழுவதுமாக நிற்க வைக்கப்படுகின்றனர். அதன் விளைவாக பல வகையான உடல்நலக்கேடுகளுக்கு ஆளாகின்றனர். தங்களது வேலை நேரம் முழுவதும் தங்கள் பாதங்களிலேயே நிற்கும் வேலையாட்களின் நிலையை கருத்தில் கொண்டு, கடைகள் மற்றும் நிறுவனங்களின் அனைத்து வேலையாட்களுக்கும் இருக்கை வசதி வழங்க வேண்டும் என்றே கருதுகிறது.

4-9-2019 அன்று நடைபெற்ற மாநில தொழிலாளர் ஆலோசனைக் குழுவின் கூட்டத்தில் வேலையாட்களுக்கு இருக்கை வசதி வழங்குவது தொடர்பான ஆலோசனை முன் வைக்கப்பட்டது. அந்தக் கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களால் ஒத்த கருத்துடன் இந்தக் கோரிக்ைக ஏற்கப்பட்டது.எனவே இந்த அரசானது மேற்சொன்ன நோக்கத்திற்காக 1947ம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தை திருத்தம் செய்வதென முடிவு செய்துள்ளது.இவ்வாறு அந்த சட்ட முன்வடிவில் கூறப்பட்டுள்ளது.

Tags : Shops, Companies, Employees, Legislatures, Legal Drafting, Filing
× RELATED ரூ.1,700 கோடி அபராதம் செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்