×

சுருக்குமடி வலைக்கு அனுமதி வழங்க வேண்டி பூம்புகார் மீனவர்கள் தமிழ்நாடு அரசுக்கு வலியுறுத்தல்

சீர்காழி: சீர்காழி அருகே பூம்புகாரில் நடந்த மீனவர்கள் ஆலோசனை கூட்டத்தில் சுருக்குமடி வலைக்கு அனுமதி தர அரசுக்கு கோரிக்கை விடுத்து மீனவர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மீனவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பூம்புகார் கிராம பிரதிநிதிகள் சுருக்குமடி வலை பயன்படுத்த மீனவர்களுக்கு அரசு அனுமதி அளிக்கவும் இருதரப்பு மீனவர்களையும் அழைத்து பேசவும் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றினர்.

தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த அக்கிராம மீனவர்கள் சுருக்குமடி வலை பயன்படுத்தும் பூம்புகார், திருமுல்லைவாசல், சத்திரப்பாடி, நம்பியார் நகர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் கடந்த 2 ஆண்டுகளாக சுருக்குமடி வலை பயன்படுத்த முடியாமல் வாழ்வாதாரம் இழந்து தவிப்பதாக தெரிவித்தனர். மேலும் வேலை இழந்து வருமானம் இன்றி குடும்பங்களை நடத்த முடியாமல் வாடுவதாகவும் கவலை தெரிவித்தனர்.

 இதனிடையே சுருக்குமடி வலைகளை பயன்படுத்த ஒரு தரப்பு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் மற்றொரு தரப்பினர் தமிழக அரசு உடனடியாக சுருக்குமடி வலை மீதான தடையை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Pumbukar , Short net, fishermen
× RELATED கன்னியாகுமரி திருவள்ளூர் சிலை,...