பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகேயுள்ள பரம்பிக்குளம் அணை முழு கொள்ளளவை எட்டி நிரம்பியது. அணையின் பாதுகாப்பு கருதி 3 மதகுகள் வழியாக உபரி நீர் திறந்து விடப்படுகிறது. நேற்று பரம்பிக்குளம் பகுதியில் 29 மி.மீ. மழை பெய்ததை அடுத்து அணை அதன் முழு கொள்ளளவை எட்டியது. அணைக்கு வினாடிக்கு 2,352 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது, 2,085 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.