×

இந்தியாவில் புழக்கத்தில் உள்ள போலி கொரோனா தடுப்பூசிகள் : மாநில அரசுகளுக்கு விளக்கம் அளித்து மத்திய அரசு கடிதம்

டெல்லி : போலி கொரோனா தடுப்பூசிகளை அடையாளம் காண்பது குறித்து மாநில அரசுகளுக்கு விளக்கம் அளித்து மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் வி ஆகிய 3 தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ள நிலையில், போலி கொரோனா தடுப்பூசிகள் வடிவில் அச்சுறுத்தல் எழுந்துள்ளது. தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் கோவாக்சின் உட்பட சில தடுப்பூசிகள் போலியாக தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படுவதாக செய்திகள் வெளியான நிலையில், இந்தியாவிலும் அவை புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதையடுத்து உண்மையான தடுப்பூசிகளை எவ்வாறு அடையாளம் காண்பது என்பது தொடர்பாக மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு கடிதம் எழுதியுள்ளது. அதில் தடுப்பூசிகளின் மேல் உள்ள லேபிள் எந்த நிறத்தில் இருக்கும், அதில் நிறுவனங்களின் குறியீடுகள் என்ன என்பது உள்ளிட்ட தகவல்கள் குறித்து விளக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக போலி கொரோனா தடுப்பூசிகள் குறித்து ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா செய்தியாளர்களிடம் கூறுகையில், “நம் நாட்டில் போலி தடுப்பூசிகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது” என்று தெரிவித்திருந்தார்.

Tags : India ,Central Government , India, Fake, Corona, Vaccines
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...