×

முத்தமிழ் மையம் சார்பில் விருது வழங்கும் விழா

காஞ்சிபுரம்: காஞ்சி முத்தமிழ் மையம் சார்பில் ஆசிரியர் தினத்தையொட்டி முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பயின்ற திருத்தணி ராதாகிருஷ்ணன் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு முத்தமிழ் மையத்தின் இயக்குனர் லாரன்ஸ் தலைமை தாங்கினார். இந்திய வருமான வரித்துறை கூடுதல் ஆணையர் நந்தகுமார், திருவள்ளூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஆறுமுகம், கல்வியாளர் சங்கமத்தின் நிறுவனர் சிகரம் சதீஷ் ஆகியோர் பங்கேற்று விருதுகளை வழங்கினர்.

இவ்விழாவில் அரசுப்பள்ளி மாணவர்களின் கல்வி நலனுக்காக சிறப்பாக பணியாற்றிவரும் காஞ்சிபுரம் ஒன்றியம் மற்றும் நகராட்சி பள்ளிகளை சார்ந்த அங்கம்பாக்கம் அறிவியல் ஆசிரியர் சேகர், காவாந்தண்டலம் பள்ளி ஆசிரியர் சரவணன், மேட்டுக்குப்பம் பள்ளி ஆங்கில ஆசிரியர் இளங்கோவன், மாவட்ட ஆட்சியர் காலனி நடுநிலைப்பள்ளி ஆசிரியர் ஜெபநேசன், குருவிமலை பள்ளி ஆசிரியர் ராம்பிரசாத், மேல்பிள்ளையார்பாளையம் கணித ஆசிரியர் கவிதா ஆகியோருக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் பெருந்தகை விருது வழங்கப்பட்டது.

Tags : Muthamil Center , Award Ceremony on behalf of the Muthamil Center
× RELATED கனமழையால் துபாய்க்கு 2-வது நாளாக விமான சேவை ரத்து