×

கோவை அரசுப்பள்ளியில் 3 மாணவர்களுக்கு கொரோனா

கோவை: கோவை அரசு பள்ளி மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவை சுல்தான்பேட்டை உயர்நிலைப்பள்ளியை சேர்ந்த 9ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு மாணவர்கள் சுமார் 33 பேருக்கு நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவுகள் நேற்று வந்தன. இதில், 9ம் வகுப்பை சேர்ந்த 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனடியாக சம்மந்தப்பட்ட மாணவர்களின் வீடுகளுக்கு சென்று தகவல் அளித்தனர். மாணவர்கள் 3 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதையடுத்து இன்று பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Tags : Corona ,Coimbatore ,Government School , Corona for 3 students in Coimbatore Government School
× RELATED கோவை மாநகராட்சி நீச்சல் குளத்தில் குவியும் சிறுவர்கள்